அயர்ந்து களைத்த நாளில் எல்லாம்
உன் அழகை கண்டு,
என்னை புதுப்பிக்கிறேன் ....
என்னை தொட்டு தவழும்
உன் அலைக்கரங்களால்
என்னை புதுப்பிக்கிறேன் .....
கண்ணம் சிலிர்த்து தொடும்
உன் ஈர மூச்சு காற்றில் , வாடிபோன
என்னை புதுப்பிக்கிறேன் ....
ஓங்கி விழும் அலைசிரிப்பில்
மன சோர்வு தெறித்து
என்னை புதுப்பிக்கிறேன் .....
கடல் தான் நீ
கரையில் - உன் கரங்களில்
மணலில் - உன் மடியில்
அலையில் - உன் அருகில்
அத்தனையும் இங்கு நீ ....
பேச தூண்டவில்லை
மௌனமாய் --- உன்னுள் கரைகிறேன் ....
உன்னை காதலிக்கிறேன் .....
No comments:
Post a Comment